தஞ்சாவூர் மற்றும் திண்டுக்கல் மாநகராட்சியில் 125 கோடி ரூபாய் செலவில் அடிப்படை வசதிகள் மேம்பாடு : முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பொதுமக்கள் நெஞ்சார்ந்த நன்றி-பாராட்டு - பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம்

Aug 27 2014 11:29AM
எழுத்தின் அளவு: அ + அ -

தஞ்சாவூர் மற்றும் திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் 125 கோடியே 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், குடிநீர், சாலைகள் சீரமைப்பு, பாதாள சாக்கடைப் பணிகள், பூங்கா மேம்பாடு, நடைபாதைகள், தெருவிளக்குகள், நீர்நிலைகள் மேம்பாடு, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள், ஒளிரும் வழிகாட்டிப் பலகைகள், பேருந்து நிலைய மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ள முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதாவுக்கு இவ்விரு மாநகராட்சிகளின் பொதுமக்கள் நெஞ்சார்ந்த நன்றியும்-பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர் மாநகராட்சி மக்கள் நலனுக்காக, 82 கோடியே 43 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு அடிப்படை வசதிகளை மேம்படுத்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதை வரவேற்று அப்பகுதி மக்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் 42 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பல்வேறு அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என்ற, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் அறிவிப்பை வரவேற்று, பல்வேறு தரப்பினரும், பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடியதோடு, முதலமைச்சருக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00