முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில், மோனோ ரயில் திட்ட செயலாக்கம் குறித்த ஆய்வுக் கூட்டம் - அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்பு
Aug 26 2014 6:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற மோனோ ரயில் திட்ட செயலாக்கம் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், மோனோ ரயில் திட்ட செயலாக்கம் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், நிதி மற்றும் பொதுப் பணித்துறை அமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. நத்தம் ஆர். விசுவநாதன், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. ஆர். வைத்திலிங்கம், நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி, போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. வி. செந்தில்பாலாஜி, தலைமைச் செயலாளர் திரு. மோகன் வர்கீஸ் சுங்கத், தமிழ்நாடு அரசு ஆலோசகர் திருமதி. ஷீலா பாலகிருஷ்ணன், அரசு தலைமை வழக்கறிஞர் திரு. ஏ.எல். சோமயாஜி, நிதித்துறை முதன்மைச் செயலாளர் திரு. கே. சண்முகம், போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் த. பிரபாகர ராவ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.