கோவை மாநகராட்சி மேயர் இடைத்தேர்தலில், லட்சக்கணக்கில் அலைகடலென திரண்டிருந்த மக்களிடையே முதலமைச்சர் ஜெயலலிதா தீவிர வாக்கு சேகரிப்பு : பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 5,200 பேர் முதலமைச்சர் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்

Sep 16 2014 11:40AM
எழுத்தின் அளவு: அ + அ -

அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா, தமிழகத்தில் வரும் 18ம் தேதி நடைபெறவுள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலை முன்னிட்டு, கோயம்புத்தூர் மாநகராட்சியில், வ.உ.சி. பூங்கா மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்ட மேடையில், அலைகடலென லட்சக்கணக்கில் திரண்டிருந்த பொதுமக்களிடையே எழுச்சியுரையாற்றினார். தமிழகத்தில் அடுக்கடுக்கான மக்கள் நலத்திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வரும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு பொதுமக்களும், அ.இ.அ.தி.மு.க. தொண்டர்களும் லட்சக்கணக்கில் பேரார்வத்துடன் திரண்டு நின்று, விண்ணைப் பிளக்கும் வாழ்த்தொலி முழக்கங்களுடன் எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர்.

தமிழகத்தில் தூத்துக்குடி மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சிகளின் மேயர் பதவி உட்பட, உள்ளாட்சி அமைப்புகளில் காலியாகவுள்ள பதவி இடங்களுக்கு வரும் 18-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலை முன்னிட்டு, அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெ ஜெயலலிதா, தூத்துக்குடி மாநகராட்சியில், சூறாவளி தேர்தல்பிரச்சார சுற்றுப் பயணம் மேற்கொண்டு, லட்சக்கணக்கான மக்களிடையே தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிடும் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் திரு. கணபதி ப. ராஜ்குமாரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா சென்னையிலிருந்து விமானம் மூலம் கோயம்புத்தூர் சென்றார். சென்னை விமான நிலையத்தில், அ.இ.அ.தி.மு.க. அவைத்தலைவர் திரு. இ. மதுசூதனன் உள்ளிட்டோர் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு பூங்கொத்துகள் வழங்கி வரவேற்றனர்.

தொடர்ந்து, கோயம்புத்தூர் விமான நிலையம் சென்றடைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை, அமைச்சர்கள் திரு. ஓ. பன்னீர்செல்வம், திரு. S.P. வேலுமணி ஆகியோர் மலர்கொத்துகள் வழங்கி வரவேற்றனர். தமிழக சட்டமன்றப் பேரவை துணை சபாநாயகர் திரு. பொள்ளாச்சி ஜெயராமன், கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளர் திரு. கணபதி ப.ராஜ்குமார், கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. ஏ.கே. செல்வராஜ், திரு. A.P. நாகராஜன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஆர். சின்னசாமி ஆகியோரும் மலர்கொத்துகள் வழங்கி முதலமைச்சரை வரவேற்றனர்.

பின்னர், கோயம்புத்தூர் விமான நிலையத்திலிருந்து, தேர்தல் பிரச்சார வாகனம் மூலம் புறப்பட்ட முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, வழிநெடுகிலும், சாலையின் இரு மருங்கிலும் திரண்டிருந்த லட்சக்கணக்கான மக்கள், வாழ்த்து முழுக்கங்கள் எழுப்பி, முதலமைச்சருக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர். கழகத் தொண்டர்கள், பெண்கள், பொதுமக்கள் என அலைகடலென திரண்டு வந்திருந்த ஏராளமானோர் முதலமைச்சருக்கு உற்சாகம் பொங்க வரவேற்பளித்தனர்.

முதலமைச்சரை வரவேற்கும் விதமாக வழிநெடுகிலும் கழகக் கொடிகள், வரவேற்புப் பதாகைகள், பேனர்கள், அலங்காரத் தோரணங்கள் என கோயம்புத்தூர் மாநகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. செண்டை மேளங்கள் உள்ளிட்ட பல்வேறு இசைக்கருவிகள் முழங்க முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, வழிநெடுகிலும் பல்வேறு இடங்களில் கழக மகளிர் அணியினர் முளைப்பாரி ஏந்தி உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், ஆயிரக்கணக்கான பெண்கள் பால்குடங்கள் ஏந்தியும், முதலமைச்சரை வரவேற்றனர். படுகர் இன மக்கள் பாரம்பரிய நடனமாடி முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

பின்னர், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெறும் வ.உ.சி. பூங்கா மைதானத்திற்கு சென்றார். வழிநெடுகிலும் சாலையின் இருமருங்கிலும் அலைகடலென திரண்டிருந்த பொதுமக்களிடம் தமது இரு விரல்களை உயர்த்திக் காண்பித்து கழக வேட்பாளருக்கு முதலமைச்சர் ஆதரவு திரட்டினார். பொதுக்கூட்ட மேடை அருகே பேரூர் பட்டீஸ்வரர் கோவில், ஈச்சனாரி விநாயகர் திருக்கோயில், கோணியம்மன் திருக்கோவில், தண்டுமாரியம்மன் திருக்கோவில், சித்தாமூர் ஐயப்பன் கோவில், உக்கடம் லட்சுமிநரசிம்மர் பெருமாள் கோவில் ஆகிய திருக்கோவில்கள் சார்பில் முதலமைச்சருக்கு பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

தேர்தல் பிரச்சார மேடைக்குச் சென்ற முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அலைகடலென லட்சக்கணக்கில் திரண்டிருந்த பொதுமக்களின் விண்ணைப் பிளக்கும் வாழ்த்தொலி முழக்கங்களுக்கு இடையே வெற்றிச் சின்னமாம் இரட்டை இலைச் சின்னத்தைக் குறிக்கும் வகையில் தமது இருவிரல்களை உயர்த்திக் காண்பித்து பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில், இந்திய குடியரசுக்கட்சித் தலைவர் டாக்டர். செ.கு. தமிழரசன், அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் திரு. P.V. கதிரவன், கொங்கு இளைஞர் பேரவை நிறுவன அமைப்பாளர் திரு. உ. தனியரசு, மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் திரு. ஸ்ரீதர் வாண்டையார், இந்திய தேசிய லீக் கட்சித் தலைவர் திரு. பஷீர் அகம்மது, இந்திய யூனியன் காயிதேமில்லத் லீக் கட்சித் தலைவர் திரு. தாவூத் மியாகான், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் திரு. பழனிச்சாமி, மாவீரன் தீரன் சின்னமலை பேரவையின் மாநிலப் பொதுச் செயலாளர் திரு. கொங்கு ராஜாமணி, கொங்கு வேளாளர் கவுண்டர் பேரவையின் தலைவர் திரு. மணிகவுண்டர், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் பேராயர் டாக்டர் பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, பிரம்மாண்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் லட்சக்கணக்கில் திரண்டிருந்த பொதுமக்களிடையே எழுச்சியுரையாற்றி, கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கான அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் திரு. கணபதி ப. ராஜ்குமாருக்கு ஆதரவு திரட்டினார். பின்னர், பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த 5,200 பேர், முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா முன்னிலையில் அ.இ.அ.தி.மு.க.வில் இணைந்தனர். தேர்தல் பிரச்சார பொதுக்கூட்ட மேடையில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, கோவை புறநகர் மாவட்டக் கழகத்தின் சார்பில், அதன் செயலாளரும், அமைச்சருமான திரு. S.P. வேலுமணி, வீரவாள் வழங்கினார்.



கழகத்தில் இணைந்தனர்

கோயம்புத்தூரில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா முன்னிலையில், பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த 5,200 பேர் அ.இ.அ.தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களுக்கு அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர் உரிமைச் சீட்டுகளை வழங்கி முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்தார். தாயுள்ளத்தோடு, தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்ட முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு அவர்கள் தங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிடும் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் திரு. கணபதி ப. ராஜ்குமாரை ஆதரித்து, கோயம்புத்தூர் வ.உ.சி. பூங்கா மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா எழுச்சிப் பேருரையாற்றினார்.

இந்தப் பொதுக்கூட்டத்தில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா முன்னிலையில், காங்கிரஸ் கட்சியின், மாநில காங்கிரஸ் சேவா தள அமைப்புச் செயலாளர் திரு. R.S. கருணாகரன் தலைமையில் 1,500 பேர்; தே.மு.தி.க.வைச் சேர்ந்த, கோவை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் திரு. R. பிரபாகரன் தலைமையில் 700 பேர், கோவை வடக்கு மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் திரு. R. கவுரிநாதன் தலைமையில் 800 பேர், கோவை வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணைச் செயலாளர் திரு. R.A சக்திவேல் தலைமையில் 400 பேர், எஸ்.எஸ். குளம் பேரூராட்சி மன்ற 10-ஆவது வார்டு உறுப்பினர் திருமதி P. பாக்கியம் தலைமையில் 300 பேர்; தி.மு.க.-வைச் சேர்ந்த சூலூர் ஊராட்சி ஒன்றியக் குழு 10-ஆவது வார்டு உறுப்பினர் திரு. K.K. தங்கவேல் தலைமையில் 500 பேர், துடியலூர் பேரூராட்சி செயலாளர் திரு. D.R. தேவராஜ் தலைமையில் 400 பேர்; தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின் ஒருங்கிணைந்த மாவட்டத் தலைவர் திரு. ஆர். கூர்மன் தலைமையில் 400 பேர்; கண்ணம்பாளையம் பேரூராட்சி மன்ற 15-ஆவது வார்டு சுயேட்சை உறுப்பினர் திரு. P. மாரிமுத்து தலைமையில் 200 பேர் உட்பட கோவை மாநகர் மாவட்ட தேமுதிக மாணவர் அணி துணைச் செயலாளர் திரு. K. பிரபாகரன் உள்ளிட்ட 5,200 பேர் தங்கள் கட்சிகளில் இருந்து விலகி, முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா முன்னிலையில், தங்களைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

தாயுள்ளத்தோடு தங்களை, அ.இ.அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டதற்காக, கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதாவுக்கு தங்கள் நெஞ்சம் நிறைந்த நன்றியினை, அவர்கள் தெரிவித்துக் கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00