முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவின்படி செயல்படுத்தப்பட்டு வரும் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் உயர்கல்வி பயிலும் திட்டம் - மேலும் 6 மாணவர்கள் இங்கிலாந்து பயணம்

Sep 23 2014 2:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் உத்தரவுக்கிணங்க, வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் உயர்கல்வி பயில மேலும் 6 மாணவர்கள் இன்று காலை இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றனர்.

தமிழக மாணவ-மாணவிகள், வெளிநாடுகளில் கற்பிக்கப்படும் உயர்கல்வியை பெறுவதற்கு வசதியாக தேர்வு செய்யப்பட்ட மாணவ-மாணவிகளை வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களுக்கு அனுப்பி வைக்கும் சீரிய திட்டம் ஒன்றை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அறிமுகப்படுத்தியுள்ளார். இதன்படி வெளிநாடு செல்லும் மாணவர்கள் ஒரு செமஸ்டர் கல்வியை அங்கு தங்கி பயில்வார்கள். இதற்காக ஒரு மாணவருக்கு ஆண்டொன்றுக்கு 15 லட்சம் ரூபாய் வீதம் 30 பேருக்கு 4 கோடியே 50 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. மேலும், மாணவர்கள் வெளிநாட்டில் தங்கி பயில்வதற்கான அனைத்து வசதிகளையும் தமிழக அரசு செய்து தருகிறது. இதன்படி, கடந்த 13-ம் தேதி 2 மாணவ-மாணவியர் மற்றும் ஒரு பேராசிரியரும், 16-ம் தேதி 8 மாணவ-மாணவிகள் ஒரு பேராசிரியரும், 21-ம் தேதி 4 மாணவ-மாணவிகள் ஒரு பேராசிரியரும், ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று காலை 6 மாணவ-மாணவிகள் மற்றும் ஒரு பேராசிரியர் என 7 பேர் சென்னையிலிருந்து இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றனர். இவர்கள் ஷெபீல்டு ஹலாம் பல்கலைக்கழகம், நாட்டிங்ஹாம் பல்கலைக் கழகம் உள்ளிட்ட 5 பல்கலைக் கழகங்களில் உயர்கல்வி பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00