முதலமைச்சர் ஜெயலலிதா பல்வேறு தடைகளை தாண்டி தமிழகத்தை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வதாகவும் உலக வங்கித்தலைவர் ஜிம்-யங்-கிம் பாராட்டு
Jul 21 2014 4:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்திற்கு வருகை தந்துள்ள உலக வங்கித்தலைவர் ஜிம்-யங்-கிம், தமிழகத்தின் உள்கட்டமைப்பு வசதிகள் அயல்நாட்டு தொழில் நிறுவனங்கள் தொடங்குவதற்கு ஏதுவாக அமைந்துள்ளதாகவும், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பல்வேறு தடைகளை தாண்டி தமிழகத்தை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வதாகவும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
டெல்லியிலிருந்து 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள உலக வங்கித்தலைவர் ஜிம்-யங்-கிமிற்கு சென்னை விமான நிலையத்தில் அரசு அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த திரு.ஜிம்-யங்-கிம், வாஷிங்டனுக்கு அடுத்தபடியாக சென்னையில் உலக வங்கி சிறப்பாக செயல்படுவதாக தெரிவித்தார். மேலும், தமிழகத்தின் உள்கட்டமைப்பு வசதிகள் அயல்நாட்டு தொழில் நிறுவனங்கள் தொடங்குவதற்கு ஏதுவாக அமைந்துள்ளதாகவும், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பல்வேறு தடைகளை தாண்டி தமிழகத்தை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வதாகவும் பாராட்டு தெரிவித்தார்.