உலக கடற்கரை தூய்மை தினம் - சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற சுத்தப்படுத்தும் பணியில் ஏராளமான மாணவ-மாணவியர் பங்கேற்பு

Sep 20 2014 3:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலக கடற்கரை தூய்மை தினத்தையொட்டி, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில், மாணவ-மாணவியர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சர்வதேச அளவில் பொழுபோக்கு அம்சங்களில் கடற்கரை முக்கியஇடத்தை வகிக்கிறது. கடற்கரைக்கு ஏராளமானோர் வந்து செல்லும் பட்சத்தில், உடல்நலத்திற்கும், கடல்வாழ் உயிரினங்களுக்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய பிளாஸ்டிக் பை உள்ளிட்ட பொருட்கள் வீசப்படுகின்றன. இதனை தவிர்த்து, கடற்கரையை தூய்மையாக வைத்துக்கொள்ள வலியுறுத்தும், உலக கடற்கரை தூய்மை தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி, சென்னை மெரீனா கடற்கரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில், மாணவ-மாணவியர் திரளாகக் கலந்து கொண்டு, கடற்கரையை தூய்மைப்படுத்தினர்.

தூத்துக்குடி துறைமுகப்பகுதியில் நடைபெற்ற உலக கடற்கரை தூய்மை தின நிகழ்ச்சியில், கடலோர காவல்படையினர், தேசிய மாணவர் படையினர், பொதுமக்கள் என நூற்றுக் கணக்கானோர் கலந்துகொண்டு, தூய்மைப் படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

இதேபோல், புதுச்சேரியிலும் உலக கடற்கரை தூய்மை தினம் கடைபிடிக்கப்பட்டது. அங்குள்ள கடற்கரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில், பள்ளி மாணவ-மாணவியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00