குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்குத் தேவைப்படும் மனித ஆற்றலை வழங்க "அம்மா திறன் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்" தொடங்கப்படும் : சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு
Jul 24 2014 3:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழ்நாட்டில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்குத் தேவைப்படும் மனித ஆற்றலை வழங்கிடும் வகையிலும், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையிலும் "அம்மா திறன் வேலைவாய்ப்புமற்றும் பயிற்சி திட்டம்" தொடங்கப்படும் என சட்டப்பேரவையில் இன்று, முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் இன்று, முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா பேரவை விதி எண் 110-ன் கீழ், அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அப்போது அவர், தமிழ்நாட்டில் தொழில்வளம் மேலும் பெருகி, வேலைவாய்ப்புகள் அதிகரித்து, தமிழ்நாட்டின் பொருளாதாரம் உயர வழிவகுக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.