தமிழகத்தில் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க 6,285 கோடி ரூபாயில், 88,000 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சட்டப்பேரவையில் தகவல்
Jul 21 2014 3:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் குடிநீர் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக 6,285 கோடியே 34 லட்சம் ரூபாய் செலவில், 88,247 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது.
தமிழக சட்டப்பேரவையில் இன்று, பல்வேறு கட்சி உறுப்பினர்கள் கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்து, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றம் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் திரு. S.P.வேலுமணி பேசுகையில் இதனை தெரிவித்தார். குடிநீர் விநியோகப் பணிகளுக்கு மட்டும் 651 கோடியே 43 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.