தமிழகத்தின் மின் தேவையை பூர்த்தி செய்து, மின் உற்பத்தியில் மாநிலம் தன்னிறைவுப் பெற்றுள்ளது - முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சட்டப்பேரவையில் பாராட்டு
Jul 21 2014 3:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தின் மின் தேவையை பூர்த்தி செய்து, மின் உற்பத்தியில் மாநிலம் தன்னிறைவைப் பெற்றிருப்பதுடன் எதிர்காலத்திற்குத் தேவையான மின் திட்டங்களையும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா நிறைவேற்றி இருப்பதாக சட்டப்பேரவையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
சட்டப்பேரவையில் இன்று, மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது குறுக்கிட்டுப் பேசிய அமைச்சர் திரு. நத்தம் இரா. விசுவநாதன், 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட மேட்டூர் அனல் மின் நிலையத் திட்டப்பணிகள், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னரே நிறைவு செய்யப்பட்டு செயல்பாட்டிற்கு வந்ததாக தெரிவித்தார். மின் உற்பத்தியை அதிகரிப்பதில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, அதி விரைவாகச் செயல்பட்டு நடவடிக்கை மேற்கொண்டதன் பயனாக, தமிழகம் தற்போது மின்சார உற்பத்தியில் தன்னிறைவை அடைந்திருப்பதாகவும், எதிர்காலத்திற்குத் தேவையான மின் உற்பத்தித் திட்டங்களையும் முதலமைச்சர் செயல்படுத்தி வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.