"தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தருமம் மறுபடியும் வெல்லும்" : ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு, தமிழக முதலமைச்சர் வாழ்த்து
Oct 1 2014 4:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு, தமிழக முதலமைச்சர் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். "தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தருமம் மறுபடியும் வெல்லும்" என்ற இயற்கை நியதிப்படி, வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையோடு செயல்பட்டால் அதர்மம் என்னும் சூழ்ச்சி அகன்று தர்மம் நிலைநாட்டப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு முதலமைச்சர் இன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், வாழ்விற்கு வளம் சேர்க்கக்கூடிய அறிவை அளிக்கும் கலைமகளாயும், செல்வத்தைத் தரும் திருமகளாயும், துணிவைத் தரும் மலைமகளாயும் விளங்கும் அன்னையை, பெண்மையை போற்றி வணங்கும் விழா நவராத்திரி திருவிழா என்றும், மக்களின் துன்பம் நீக்க எண்ணிய அன்னை ஒன்பது நாட்கள் மகிஷாசுரன் என்ற அரக்கனுடன் போரிட்டு அவனை வதம் செய்த நாள் விஜயதசமி திருநாள் என்றும் குறிப்பிட்டுள்ளார். "தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தருமம் மறுபடியும் வெல்லும்" என்பது இயற்கை நியதி- வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையோடு நாம் செயல்பட்டால் அதர்மம் என்னும் சூழ்ச்சி அகன்று தர்மம் நிலைநாட்டப்படும் எனக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், அனைவருக்கும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.