வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
Sep 20 2014 3:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வெப்பச்சலனம் காரணமாக, அடுத்த 24 மணிநேரத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஒடிசாவையொட்டியுள்ள வங்கக் கடலில், காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலைகொண்டிருந்ததால், கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. தற்போது, இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, வடக்கு நோக்கி நகர்ந்துள்ளது. இந்நிலையில், வெப்பச்சலனம் காரணமாக, அடுத்த 24 மணிநேரத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக வேலூர் மாவட்டம் வாணியம்பாடி, கடலூர் மாவட்டம் கடலூர், தொழுதூர் மற்றும் பெரம்பலூரில் 3 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.