தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு - முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு
Jul 30 2014 2:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படும் வகையில், அவதூறாகப் பேசியதாக, தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், முதலமைச்சர் சார்பில் இன்று அவதூறு வழக்கு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மாநகர அரசு வழக்கறிஞர் திரு. எம்.எல்.ஜெகன் தாக்கல் செய்த இந்த மனுவில், கடந்த 22-ம் தேதி புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா குறித்து மு.க.ஸ்டாலின் அவதூறாகப் பேசியிருப்பதாகவும், அவரது பேச்சு உள்நோக்கம் கொண்டது, உண்மைக்குப் புறம்பானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசு மற்றும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறாகப் பேசியுள்ள மு.க.ஸ்டாலினை, கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.