தமிழக சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் குறிப்பிட்ட திருக்குறள் தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதா நகைச்சுவையாக தெரிவித்த கருத்தால் அவையில் சிரிப்பலை
Jul 30 2014 3:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான அரசு, பொது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளில் விரைந்து செயல்படுவதை தமிழக சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் சுட்டிக்காட்டி பேசினார். அப்போது அவர் குறிப்பிட்ட திருக்குறள் தொடர்பாக, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குறுக்கிட்டு நகைச்சுவையாக தெரிவித்த கருத்து, அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
தமிழக சட்டப்பேரவையில் இன்று, அரூரில் உள்ள பெரியார் பல்கலைக் கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டியதன் அவசியம் குறித்து கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் திரு.P.பழனியப்பன் பதில் அளித்தார். அப்போது, அவர் மேற்கோள் காட்டிய திருக்குறள் தொடர்பாக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா குறுக்கிட்டு, நகைச்சுவையாக கருத்து தெரிவித்தார்.