ஈராக்கில் சிக்கித் தவித்த மேலும் 26 தமிழர்கள் சென்னை வருகை - முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் அரசு செலவில் மதுரைக்கு பயணம்

Jul 29 2014 12:27PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஈராக் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டு, அங்கு சிக்கித் தவித்து வந்த மேலும் 26 தமிழர்கள், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் நடவடிக்கையின் பேரில் இன்று பத்திரமாக சென்னை வந்து சேர்ந்தனர். தமிழக அரசின் செலவில் அவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

ஈராக் நாட்டில் புரட்சிப் படையினருக்கும், அரசு ராணுவத்தினருக்கும் இடையே கடும் மோதல் நீடித்து வருகிறது. இதனால் அங்கு பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருந்த வெளிநாட்டவர்கள் அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களை பத்திரமாக மீட்டுக் கொண்டுவர முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா துரித நடவடிக்கை மேற்கொண்டார். அவரது முயற்சியால் ஈராக்கில் சிக்கித் தவித்துவந்த தமிழர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஈராக் நாட்டில் பணியாற்றி வந்த மேலும் 26 தமிழர்கள் அபுதாபி, மும்பை வழியாக இன்று சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தனர். இவர்கள் அனைவரும் மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். முதலமைச்சரின் ஆணையின்படி இவர்களை தமிழக அரசின் செலவில் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00