சென்னை விமான நிலையத்தில், கடந்த இருவாரங்களில் மட்டும் 29 கிலோ தங்கம் பறிமுதல் - 3 குடியுரிமை அதிகாரிகள் உட்பட 12 பேர் கைது
Sep 25 2014 12:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை விமான நிலையத்தில், கடந்த 2 வாரங்களில் மட்டும், 29 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, 3 குடியுரிமை அதிகாரிகள் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் அண்மைக்காலமாக விமானம் மூலம் தங்கம் கடத்தப்பட்டு வரும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இன்று சிங்கப்பூரில் இருந்து வந்த விமானப் பயணிகளை சுங்க இலாகாத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஒருநபர் தனது உடல் முழுவதும் தங்கக் கட்டிகளை ஒட்டிக் கொண்டுவந்தது தெரிந்தது. இதையடுத்து, உடலில் ஒட்டியிருந்த 4 கிலோ 200 கிராம் தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் நடத்திய விசாரணையில், சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த பிரபாகரன் என்பது தெரியவந்தது. கடந்த 2 வாரங்களில் மட்டும், சென்னை விமான நிலையத்தில் சுமார் 29 கிலோ தங்கத்தை சுங்க இலாகாத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக, 3 குடியுரிமை அதிகாரிகள் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.