மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில அமைப்புச் செயலாளர் உள்ளிட்ட 5 பேர் அ.இ.அ.தி.மு.க.வில் இணைந்தனர்
Jul 30 2014 4:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதாவை, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில அமைப்புச் செயலாளரும், சென்னை மாநகராட்சி 60-ஆவது வார்டு மாமன்ற உறுப்பினருமான திரு. சீமாபஷீர் உள்ளிட்ட அக்கட்சியைச் சேர்ந்த 5 பேர் நேரில் சந்தித்து தங்களை கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெ ஜெயலலிதாவை இன்று, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில அமைப்புச் செயலாளரும், சென்னை மாநகராட்சி 60-ஆவது வார்டு மாமன்ற உறுப்பினருமான திரு. H. சீமாபஷீர், வட சென்னை மாவட்ட துணைச் செயலாளர் திரு. R.M. இயேசுராஜ், துறைமுகம் பகுதிச் செயலாளர் திரு. A. மகரூப், ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தொகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் திரு. H.M. முஸ்தபா, துறைமுகம் பகுதி மாவட்டப் பிரதிநிதி திரு. S.M. ஜாஹீர் ரபி ஆகியோர் நேரில் சந்தித்து தங்களைக் கழத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வின்போது சென்னை மாநகராட்சி மேயர் திரு. சைதை சா. துரைசாமி உடன் இருந்தார்.