கூவம் ஆற்றில் படிந்துள்ள கழிவுகள் மற்றும் வண்டலை அப்புறப்படுத்தவும், ஆற்றின் கரைகளை சீர்ப்படுத்தவும் முதலமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை - சட்டப்பேரவையில் தகவல்
Jul 24 2014 5:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கூவம் ஆற்றில் படிந்துள்ள கழிவுகள் மற்றும் வண்டலை அப்புறப்படுத்தவும், ஆற்றின் கரைகளை சீர்ப்படுத்தவும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது.
தமிழக சட்டப்பேரவையில் இன்று, 2014-2015 ஆம் ஆண்டுக்கான பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம், கூவம் ஆற்றில் படிந்துள்ள கழிவுகள் மற்றும் வண்டலை அப்புறப்படுத்தவும், ஆற்றின் கரைகளை சீர்ப்படுத்தவும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். மேலும், சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மூலமாக ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அந்தப் பணிகள் முடிவடைந்தவுடன் கூவம் ஆற்றை சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.