பாரத் ஸ்டேட் வங்கி பணியாளர் தேர்வில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு மிகக்குறைந்த கட்ஆஃப் மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டதற்கு டிடிவி தினகரன் கடும் கண்டனம் - சமூக நீதியின் அடித்தளத்தை சிதைக்கும் இந்த தவறை உடனடியாக சரிசெய்யவும் வலியுறுத்தல்
Jul 25 2019 10:45AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாரத் ஸ்டேட் வங்கி பணியாளர் தேர்வில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு மிகக்குறைந்த கட்ஆஃப் மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டதற்கு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் பணியாளர் தேர்வில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு மிகக் குறைந்த அளவில் கட்-ஆஃப் மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டிருப்பது குறித்து வங்கி நிர்வாகமும் மத்திய அரசும் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தாழ்த்தப்பட்டோருக்கு 61 புள்ளி இரண்டு ஐந்து, பழங்குடியினருக்கு 53 புள்ளி ஏழு ஐந்து, இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 61 புள்ளி இரண்டு ஐந்து என நிர்ணயிக்கப்பட்டுள்ள கட் ஆஃப் மதிப்பெண்கள், 10 சதவீத இடஒதுக்கீடு பெற்றுள்ள முற்பட்டவகுப்பினருக்கு மட்டும் 28 புள்ளி ஐந்தானது எப்படி? எனவும் திரு. டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
எனவே, சமூகநீதியின் அடித்தளத்தையே சிதைக்கும் இந்த தவறு உடனடியாக சரி செய்யப்பட வேண்டும் எனவும் திரு டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.