நாடாளுமன்றத்தில் கூட அரசியல் வாரிசு முறையை பின்பற்றும் தி.மு.க. - கனிமொழி மட்டுமே அவையில் பேசி வருவதாக தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு
Jul 24 2019 1:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாடாளுமன்றத்தில் பேசுவதில் கூட திமுகவின் வாரிசு அரசியலையே கடைபிடித்து வருவதாக தமிழக பா.ஜ.க. தலைவர் திருமதி தமிழிசை சவுந்திரராஜன் விமர்சித்துள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுகவுக்கு 37 எம்.பிக்கள் இருந்தபோதிலும் கனிமொழி மட்டுமே பேசி வருவதாகவும் குற்றம் சாட்டினார்.