நெல்லை மாநகராட்சி முன்னாள் மேயர் உட்பட மூன்று பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் : ஓட்டுநர் வேலை கேட்டு வந்த நபரிடம் போலீசார் விசாரணை

Jul 24 2019 5:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

நெல்லை மாநகராட்சியின் முன்னாள் மேயர் உட்பட மூன்று பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, ஓட்டுநர் வேலை கேட்டு வந்த நபர் ஒருவரிடம், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருநெல்வேலி மாநகராட்சியின் தி.மு.க. மேயராக இருந்தவர் உமா மகேஸ்வரி. இவர் பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனி அருகே உள்ள அரசு பொறியியல் கல்லூரி அருகே வசித்து வந்தார். இந்நிலையில் உமா மகேஸ்வரி அவரது கணவர் மற்றும் வீட்டில் வேலைபார்க்கும் பணிப்பெண் ஆகியோர் நேற்று, மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டனர். இந்த கொலைக்குக் காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், நேற்று மர்ம நபர் ஒருவர், முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி வீட்டிற்கு டிரைவர் வேலை கேட்டு வந்ததாகவும், அவர், தனது ஆதரவாளர்களுடன் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருக்‍கலாம் எனவும் போலீசார் சந்தேகம் அடைந்தனர். இதுகுறித்து முதற்கட்ட விசாரணையை போலீசார் தொடங்கியுள்ளனர். கொலைக்‍ குற்றவாளியை கைது செய்ய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குற்றவாளிகள் தீவிரமாக தேடப்பட்டு வருகின்றனர். பட்டப்பகலில் மூன்று பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், நெல்லை மாவட்ட மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00