மதுரையில் ரயில்பெட்டி இடைவெளியில் சிக்கி உயிருக்கு போராடிய பெண் பயணி - ஒரு மணி நேரம் நடைபெற்ற மீட்புப்பணியால் பல்வேறு எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதம்

Jul 24 2019 4:56PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரையில் தூக்க கலக்கத்தில் ரயிலில் இறங்கியபோது, பிளாட்பாரத்தில் சிக்கிகொண்ட பெண், ஒருமணி போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டார். இதனால் பல்வேறு எக்ஸ்பிரஸ் ரயில்களின் பயணம் தாமதமானது.

சென்னையிலிருந்து திருவனந்தபுரம் நோக்கி செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் இன்று காலை, மதுரை ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது. அப்போது ரயிலில் வந்த மதுரையை சேர்ந்த விஜயபூர்ணிமா என்பவர், தூக்க கலக்கத்தில் ரயில் நிற்பதற்கு முன்பாகவே இறங்க முயன்றார். இதனால் அவர் பிளாட்பார இடைவெளியில் சிக்கிக்கொண்டார். உடனடியாக சக பயணிகள் கூச்சலிட்டதை தொடர்ந்து, பக்கவாட்டு சுவரை உடைத்து, ரயில்வே போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய அதிகாரிகள் ஒருமணி நேர போராட்டத்திற்கு பின்னர் அப்பெண்ணை மீட்டனர். காயங்களுடன் மீட்கப்பட்ட அவர், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் இன்று காலை மதுரை வரவேண்டிய ஹவுரா எக்ஸ்பிரஸ், பாண்டியன் மற்றும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஒரு மணி நேரம் தாமதமாக வந்து சென்றன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00