கர்நாடக அணைகளில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறப்பு - மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 7 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
Jul 24 2019 4:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கர்நாடக அணைகளில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறக்கப்படுவதால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 7 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடக மாநிலத்திற்கு உட்பட்ட காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் 7 நாட்களுக்குப் பிறகு நேற்று காலை மேட்டூர் அணையை வந்தடைந்தது. பண்ணவாடி நீர்த்தேக்கப் பகுதி வழியாக மேட்டூர் அணைக்கு நீர் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 7 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. குடிநீர் தேவைக்காக வினாடிக்கு ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.