கேரளாவில் தமிழக தம்பதியை கடுமையாக தாக்கும் கேரள லாரி ஓட்டுநர்
Jul 24 2019 3:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரளாவில் தமிழக தம்பதியை சாலையில் வைத்து லாரி ஓட்டுநர் ஒருவர் கடுமையாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
கேரளாவுக்கு சுற்றுலா சென்றிருந்த தமிழகத்தைச் சேர்ந்த இளம் தம்பதியர், அம்பலவயல் பகுதியில் தங்கியிருந்தனர். அங்குள்ள பஜாருக்கு சென்றிருந்தபோது, கேரளா லாரி ஓட்டுநருக்கும், தம்பதிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதையடுத்து, லாரி ஓட்டுநர் அந்த தம்பதியை கடுமையாக தாக்கியுள்ளார். இந்த அதிர்ச்சியூட்டும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தாக்குதலுக்குள்ளான தம்பதியின் விவரங்களை வெளியிடாத கேரள போலீசார், தாக்குதல் நடத்திவிட்டு தலைமறைவான ஓட்டுநர் சஜீவானந்தனை தேடி வருகின்றனர்.