சென்னை அரும்பாக்கத்தில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே மோதல் - கத்தி போன்ற ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்ட பயங்கரம்
Jul 24 2019 1:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை அரும்பாக்கத்தில் கல்லூரி மாணவர்களிடையே நடந்த மோதலில், மாணவர்கள் ஒருவரை ஒருவர் அரிவாளால் வெட்டிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அரும்பாக்கத்தில், பச்சையப்பன் கல்லூரி மாணவர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது. சாலையில் இறங்கிய மாணவர்கள் கையில் அரிவாளுடன் ஒருவரை ஒருவர் விரட்டிச் சென்று தாக்கினர். பேருந்தினுள் வைத்து கல்லூரி மாணவர் ஒருவரை சக மாணவர்கள் இருவர் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இந்த பதறவைக்கும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. கல்லூரி மாணவர்களின் இந்த அராஜகப்போக்கு, மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.