சந்திரயான்-2 விண்ணில் செலுத்தப்பட்டதன் மூலம் விண்வெளி துறையில் இஸ்ரோ புதிய சாதனை படைத்துள்ளது - டிடிவி தினகரன் வாழ்த்து
Jul 23 2019 2:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சந்திரயான்-2 விண்ணில் செலுத்தப்பட்டதன் மூலம் விண்வெளி துறையில் இஸ்ரோ புதிய சாதனை படைத்துள்ளதாக கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், சந்திரயான்-2 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதன் மூலம் இந்திய விண்வெளித் துறையில் புதிய மைல்கல் சாதனையைப் படைத்துள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவருக்கும் மனப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
அதிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி வனிதா முத்தையா திட்ட இயக்குனராக இருந்து இந்தச் சாதனையை நிகழ்த்தி இருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது- அவரோடு சேர்ந்து சந்திரயான்-2 குழுவில் பணியாற்றிய 30 சதவிகிதம் பெண்கள் உள்ளிட்ட விஞ்ஞானிகள் அனைவரும் இதன் மூலம் வரலாற்றில் தங்களுடைய பெயரைப் பொறித்திருக்கிறார்கள்- இவர்கள் அனைவரையும் பாராட்டி மகிழ்வதாகவும் திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.