சென்னையில் கஞ்சா வைத்திருந்ததாக புகார் அளித்தவர் மீது தாக்குதல் : பாரிமுனையில் 2 பேர் தாக்கும் வீடியோ காட்சி
Jul 23 2019 11:49AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை அருகே கஞ்சா வைத்திருந்ததாக காவல்துறையிடம் புகார் அளித்த நபரை, பாரிமுனை முக்கிய சாலையில், இருவர் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
சென்னை பூக்கடை மெயின் ரோட்டில் மர்ம நபர்கள் இருவர், முகம்மது சுல்தான் என்பவரை கடுமையாக தாக்கியுள்ளனர். கஞ்சா வைத்திருந்ததை முகம்மது சுல்தான், போலீஸிடம் கூறியதால் இத்தாக்குதல் நேர்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் ஒருவரை, 2 பேர் தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தாக்குதல் சம்பவத்தின் வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது.