தூத்துக்குடியில் மதுபான பார் ஊழியர்கள் மீது போலீசார் கொடூரமாக தாக்கும் சி.சி.டி.வி. காட்சி
Jul 22 2019 5:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடியில் சந்தேகத்தின் பேரில் காவல் நிலையம் அழைத்து சென்ற பார் ஊழியர்கள் நான்கு பேரை போலீசார் கொடூரமாக தாக்கும் சி.சி.டி.வி. காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி இரண்டாம் கேட் அருகே உள்ள மதுபான மதுபான விடுதியில் பணிபுரிந்து வரும், அசோக்குமார், பிரின்ஸ், சரோ மற்றும் ரமேஷ் ஆகிய 4 ஊழியர்களை, திருட்டுதனமாக மது விற்றதாகக் கூறி வடபாகம் காவல் உதவி ஆய்வாளர் சுந்தரம் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளார். நால்வரையும் அருகிலுள்ள கடைக்கு அழைத்துச் சென்ற போலீசார், குண்டர்கள் துணையுடன் அவர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில், நால்வருக்கும் கால்கள் உடைந்ததால், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே, போலீசார் பார் ஊழியர்களை தாக்கும் சி.சி.டி.வி. பதிவு வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக சம்மந்தப்பட்ட உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.