கட்சியின் நிர்வாகிகள் சிலர் தேர்தலின்போது சரியாக செயல்படவில்லை - ரூ.5 லட்சம் பணம் மற்றும் கான்ட்ராக்ட் தருவதாக பேரம் பேசி இ.பி.எஸ் தரப்பினர் ஆட்களை இழுப்பதாக டிடிவி தினகரன் குற்றச்சாட்டு
Jul 22 2019 5:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாடாளுமன்றத் தேர்தலில், ஒருசில மாவட்டச் செயலாளர்கள் கட்சிப் பதவிக்காக மற்றவர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு சரியாக செயல்படவில்லை என கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் தெரிவித்தார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் தலைமையில், கரிசங்காலில் இன்று நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த திரு.டிடிவி தினகரனுக்கு கழக நிர்வாகிகள், தொண்டர்கள் எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர். பின்னர் நிர்வாகிகளிடையே உரையாற்றிய திரு.டிடிவி தினகரன், பணமும், கான்ட்ராக்ட்டும் தருவதாக பேரம் பேசி இ.பி.எஸ் தரப்பினர் ஆட்களை இழுப்பதாகக் குற்றம் சாட்டினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட கழக நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்றனர்.