ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட பேரழிவு திட்டங்களை, டெல்டா மாவட்டங்களில் செயல்படுத்த எதிர்ப்பு : கருப்பு பேட்ஜ் அணிந்து கூட்டம் புறக்கணிப்பு
Jul 19 2019 5:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட பேரழிவு திட்டங்களை, டெல்டா மாவட்டங்களில் செயல்படுத்தக்கூடாது என்பதை வலியுறுத்தி, குறை தீர் கூட்டத்தில், விவசாயிகள் கருப்பு பேட்ஜ் அணிந்து வெளிநடப்பு செய்தனர்.
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் குறை தீர் கூட்டம், ஆட்சியர் திரு.அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், ஹைட்ரோகார்பன் திட்டத்தை டெல்டா மாவட்டங்களில் செயல்படுத்த முனைப்பு காட்டி வரும், மத்திய அரசுக்கு விவசாயிகள் கண்டனம் தெரிவித்தனர். தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில், கருப்பு பேட்ஜ் அணிந்து, கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.
கரும்பு நிலுவைத் தொகையை அரசு வழங்காமல் இழுத்தடிப்பதாக கூறி பேண்டேஜ்களை ஒட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.