காமன்வெல்த் பளு தூக்குதல் சாம்பியன் அனுராதாவுக்கு, கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து
Jul 19 2019 3:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காமன்வெல்த் பளு தூக்குதல் சாம்பியன் மகளிர் பிரிவில் தங்கப்பதக்கம் பெற்றுள்ள புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வீராங்கனை அனுராதாவுக்கு கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திரு.டிடிவி தினகரன், தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன் போட்டியின் பெண்கள் பிரிவில் தங்கப்பதக்கம் பெற்றுள்ள புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வீராங்கனை அனுராதாவை மனப்பூர்வமாக பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.
நெம்மேலிப்பட்டி என்ற சிறிய கிராமத்தில், மிகச்சாதாரண குடும்பத்தில் பிறந்து இச்சாதனையைப் புரிந்திருக்கிற அனுராதா, இன்னும் பல பெருமைகளை நம் நாட்டிற்குத் தேடித்தரவேண்டும் என்றும், அவரது கனவுப்படி ஒலிம்பிக்கில் தங்கம் வென்றிட வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.
அனுராதாவின் இந்த வெற்றிக்குப் பின்னால் இருக்கின்ற, அவருக்காக கல்வியைத் துறந்த சகோதரர், கூலி வேலை செய்யும் தாய் ஆகியோரின் தியாகத்தைப் போற்றுவதாகவும் திரு.டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.