நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண அனுமதி மறுப்பு - விஷால் தரப்பு கோரிக்கையை நிராகரித்தது சென்னை உயர்நீதிமன்றம்
Jul 8 2019 4:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நடிகர் சங்கத்தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை நடத்த உயர்நீதிமன்றம் அனுமதியளித்ததையடுத்து, ஜூன் 23-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. ஆனால் வாக்கு எண்ணிக்கைக்கு நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இந்த நிலையில், நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை உடனடியாக எண்ண உத்தரவிட வேண்டும் என விஷால் தரப்பு கோரிக்கை விடுத்திருந்தது. விசாரணை நிலுவையில் உள்ளதாகக் கூறி, விஷால் தரப்பு கோரிக்கையை நிராகரித்த உயர்நீதிமன்றம் வாக்கு எண்ணிக்கைக்கு விதிக்கப்பட்ட தடையை நீடித்து உத்தரவிட்டது. நடிகர்கள் ஜெயமணி, சுமதி, சாந்தி, ஆகியோரது கோரிக்கை ஏற்று, இந்த வழக்கில் அவர்களை இடை மனுதாரராக சேர்த்த நீதிமன்றம், வழக்கு விசாரணை வரும் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.