மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு தொடக்கம் - முதல் நாள் கலந்தாய்வுக்கு சிறப்பு பிரிவினர் அழைப்பு
Jul 8 2019 1:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு நடந்துமுடிந்த நிலையில், தரவரிசைப் பட்டியலும் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று கலந்தாய்வு தொடங்கியுள்ளது. சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள பன்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்று வரும் இந்த கலந்தாய்வில், இன்று மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக உள்ள 127 இடங்களுக்கு 57 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். விளையாட்டு பிரிவினருக்கு உள்ள 8 இடங்களுக்கு 40 மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு 30 மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். நாளை பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.