தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புக்கு 67 ஆயிரத்து 892 பேர் விண்ணப்பம் - விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க கடைசி நாள்
Jun 25 2019 11:48AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க இன்று கடைசி நாளாகும். இதுவரை 67 ஆயிரத்து 892 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்புகளில் சேரஇந்த ஆண்டுமுதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த 7-ம் தேதிமுதல் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர். அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 38 ஆயிரத்து 955 பேரும், சுயநிதி கல்லூரி இடங்களுக்கு 28 ஆயிரத்து 937 பேரும் என மொத்தம் 67 ஆயிரத்து 892 பேர் விண்ணப்பித்துள்ளனர். கடைசி நாளில் மட்டும் ஆயிரத்து 405 பேர் ஆன்லைனில் விண்ணப்பித்தனர். இந்நிலையில், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, அதனுடன் சம்பந்தப்பட்ட கல்வி சான்றிதழ் நகல்களை இணைத்து சமர்ப்பிக்க இன்று கடைசி நாளாகும்.