சென்னை நகைக்கடையில் 150 கிராம் நகைகளை கொள்ளையடித்த பெண்கள் : சிசிடிவி பதிவைக் கொண்டு போலீசார் விசாரணை
Jun 21 2019 1:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் அடுத்தடுத்து நிகழும் கொள்ளை சம்பவங்களால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். குறிப்பாக வீடு மற்றும் நகைக்கடைகளை குறிவைத்து கொள்ளையர்கள் திருட்டு சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர்.
சென்னை வண்ணாரப்பேட்டையில் நகைக்கடை ஒன்றில் நகைகளை வாங்குவதைப்போல் நடித்த 2 பெண்கள், 150 கிராம் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். கடைக்கு வந்த அந்த 2 பெண்களும் நகைகளை வாங்குவதைப்போல் நடித்துள்ளனர். அதை நம்பிய ஊழியர்கள், விதவிதமான நகைகளை அவர்களிடம் காட்டியுள்ளனர். இந்த தருணத்தைப் பயன்படுத்தி ஊழியர்களின் கவனத்தை திசைத்திருப்பிய பெண்கள், 150 கிராம் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் கடையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள நிலையில், அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, சென்னை ஆர்.கே.நகர் நேதாஜிநகர் பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் நகைகளை சரிபார்த்தபோது ஒரு கிலோ நகை காணாமல் போனது தெரியவந்தது. இதுதொடர்பாக கடையின் உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில், கடையில் பணியாற்றிய உரிமையாளரின் உறவினர்களே சிறிது சிறிதாக திருடியது தெரியவந்தது.