அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனை, கழக நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனை சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில், இலங்கையில் நடைபெற்ற சர்வதேச கராத்தே போட்டியில் 2 தங்கப்பதக்கம் வென்ற ஆலன் ஹானஸ்ட் பெற்றோருடன் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது, வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளரும், மண்டல பொறுப்பாளருமான திரு.வெற்றிவேல், வடசென்னை வடக்கு மாவட்ட பொருளாளர் திரு.ஆர்.செல்வம், 96-வது கிழக்கு வட்டச் செயலாளர் திரு.ஈ.எபி உடன் இருந்தனர்.
வடசென்னை வடக்கு மாவட்ட இளைஞர் பாசறை துணைச் செயலாளர் திரு. மைனர் விக்னேஷ், பாக்கியலட்சுமி ஆகியோரது திருமணத்திற்கு வருகை தருவதற்காக கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனை சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கினர்.
வடசென்னை வடக்கு மாவட்ட கழக செயலாளரும், மண்டல பொறுப்பாளருமான திரு.வெற்றிவேல், ஆர்.கே.நகர் பகுதி இளைஞர் பாசறை செயலாளர் திரு.ரமேஷ் அப்போது உடன் இருந்தனர்.
கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனை கழக மீனவர் அணி துணைச் செயலாளர் திரு.ஜெ.கொ.சிவா தன்னுடைய பிறந்தநாளில் சந்தித்து வாழ்த்து பெற்றார். மாநில அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி மாநில துணைச் செயலாளர் திரு.எஸ்.ராஜ்குமார், அரியலூர் மாவட்ட மாணவர் அணி அவை தலைவர் திரு.குமரன், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் திரு.தங்கம் கோபி ஆகியோர் உடனிருந்தனர்.
கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனை கழக நட்சத்திரப் பேச்சாளர் நடிகர் ஜெயமணி மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார்.
கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனை கழக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி பொருளாளர் திரு.பி.ஆர்.சாமி, தனது பேத்தி விருச்சிகமித்ராவின் முதல் பிறந்தநாளை முன்னிட்டும், அவரின் மகள் நித்திய பவானி-கிரிதரன் தம்பதி ஆகியோரின் திருமண நாளை முன்னிட்டும் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி செயலாளர் திரு.கே.குமார் அப்போது உடன் இருந்தார்.
124வது தெற்கு வட்ட கழக செயலாளர் திரு.லோகநாதனின் மகன் ராமச்சந்திரன்-நந்தினி ஆகியோரது திருமணத்திற்கு வருகை தர வேண்டி கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனை சந்தித்து திருமண வரவேற்பு அழைப்பிதழை கொடுத்து வாழ்த்து பெற்றனர். மயிலாப்பூர் பகுதி கழக செயலாளர் திரு.அர்ஜுனன், பகுதி கழக இளைஞரணி செயலாளர் திரு.ராஜேஷ் ஆகியோர் அப்போது உடனிருந்தனர்.
இதனிடையே கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனை கழக மேலும் சில நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். அப்போது பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர்.