வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு - வட தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்யுமென வானிலை ஆய்வு மையம் தகவல்
Jun 20 2019 1:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகம் ஆந்திராவையொட்டிய வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருப்பதால், வடமாவட்டங்களில் மழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கோடைக்காலம் முடிந்தும் இன்னமும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. தமிழகத்தின் மத்திய மற்றும் வட மாவட்டங்களில் இதுவரை பரவலாக மழை கிடைக்கவில்லை. தற்போது, தமிழகம், ஆந்திராவையொட்டிய வடக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், வங்காள விரிகுடாவுக்கு மேலே காற்றின் திசையில் ஏற்படும் மாற்றத்தால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், வடமாவட்டங்களிலும் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. அடுத்த இரண்டு மூன்று தினங்களில் இந்த மழையை எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.