பெருந்துறையில் மின் கோபுரங்களிலிருந்து மின்காந்த அலைகள் பரவல் : மின் காந்த அலைகளின் தாக்கத்தால் ஒளிர்ந்த டியூப் லைட்டுகள்

Jun 18 2019 1:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

பெருந்துறை அருகே உயர் மின் கோபுரப்பகுதியில் ஆய்வு செய்த ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேச மூர்த்தி மீது, மின் காந்த அலைகள் பாய்ந்து டியூப் லைட்டுகள் ஒளிர்ந்தன.

திருப்பூர் மாவட்டம் ராசிபாளையத்தில் இருந்து தர்மபுரி மாவட்டம் இண்டூர் வரை செல்லும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் 400 கிலோ வாட் உயர்மின் கோபுரம், ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அருகே மூனாம்பள்ளியில் அமைந்துள்ளது. இந்த கோபுரப்பகுதியில், மின்காந்த அலைகளின் தாக்கம் இருப்பதாக புகார் எழுந்ததை அடுத்து, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் திரு.அ.கணேசமூர்த்தி அப்பகுதியில் ஆய்வு செய்தார். அப்போது அவர் கையில் வைத்திருந்த குழல் விளக்குகள் எரிந்தன. மேலும், அவரது உடலில் டெஸ்டர் வைத்து சோதித்தபோது, அது ஒளிர்ந்து மின்காந்த அலைகள் பாய்வதை உறுதி செய்தது. விளை நிலங்களில் பல அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி உயர்மின் கோபுரம் அமைக்‍க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போரடி வரும் நிலையில் மின்கோபுரத்தை சுற்றி மின் காந்த அலைகள் தாக்‍கம் இருப்பதும் தற்போது அம்பலமாகி உள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00