கடைக்காரர் தாக்கப்பட்ட விவகாரம் : எழுத்தாளர் ஜெயமோகன் மீது வழக்குப்பதியக் கோரி மனு
Jun 18 2019 3:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
எழுத்தாளர் ஜெயமோகன் மீது வழக்குப்பதிவு செய்ய, கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் பார்வதிபுரம் பகுதியில் தோசை மாவு வாங்கியது தொடர்பாக எழுத்தாளர் ஜெயமோகனுக்கும் கடைக்காரருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது கடைக்காரர் மற்றும் அவரது மனைவியை ஜெயமோகன் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் உள்ளனர்.
இந்நிலையில் எழுத்தாளர் ஜெயமோகன் மீது வழக்குப் பதிவு செய்ய கேட்டு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பாக கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ நாத்திடம் புகார் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், கடைக்காரரும் அவரது மனைவியும் எழுத்தாளர் மீது புகார் அளித்தும், இதுவரை வழக்குப் பதிவு செய்யாமல் இருப்பது தவறு என்றும், எனவே உடனடியாக வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.