தமிழகத்தில் தண்ணீர் பிரச்னையை கண்டுகொள்ளாமல், முதலமைச்சர் நாற்காலியை காப்பாற்றிக் கொள்வதில் மட்டுமே எடப்பாடி பழனிச்சாமி குறியாக உள்ளார் - இந்திய கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு

Jun 18 2019 1:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் உள்ள பல்வேறு பிரச்னைகளை பற்றி பேசாமல், தனது முதலமைச்சர் நாற்காலியை காப்பாற்றிக் கொள்வதில் மட்டுமே, எடப்பாடி பழனிச்சாமி குறியாக இருப்பதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் திரு. முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார்.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும், புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்‍கைகளை வலியுறுத்தி, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள விருந்தினர் மாளிகை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் திரு. முத்தரசன், அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாநிலத் தலைவர் திரு. வெங்கடேசன், சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்க மாநிலச் செயலாளர் திரு. தேவேந்திரநாத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரு. முத்தரசன், தமிழகத்தில் தண்ணீர் பிரச்னை என்று வீண் வதந்திகளை பரப்புவதாக, அமைச்சர் வேலுமணி கூறியிருப்பதற்கு கண்டனம் தெரிவித்தார். தமிழகத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து, உடனடியாக சட்டமன்றத்தைக் கூட்டி விவாதித்து, அதற்குரிய தீர்வு காண வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00