தமிழகத்தில் தண்ணீருக்கு தவிக்கும் மக்கள் - பொறுப்பற்ற அமைச்சர்கள் : மக்களை திசை திருப்பும் முரண்பட்ட பேச்சுகள்
Jun 18 2019 1:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தண்ணீர் பஞ்சத்தால் சென்னையில் IT நிறுவனங்களும், விடுதிகளும் மூடப்படுவதாக வெளியான தகவல் வதந்தி என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். அதேவேளையில் இல்லாத தண்ணீர் எங்கிருந்து கொண்டுவருவது என மற்றொரு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கேட்கிறார். இது எல்லாவற்றுக்கும் மேலாக மே, ஜுன் மாதங்களில் தண்ணீர் பஞ்சம் இருப்பது சகஜம்தான், இந்த ஆண்டு சற்று அதிகமாகவே இருக்கிறது என கூறுகிறார் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி. ஒருகுடம் தண்ணீருக்கு ஆலாய் பறக்கும் மக்கள், இந்த அமைச்சர்களின் கூற்று தங்களை கேலி செய்வதுபோல் உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.