சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து எனக்கூறி சர்ச்சையை எழுப்பிய விவகாரம் - கமல்ஹாசனுக்கு முன் ஜாமின் வழங்கியது உயர்நீதிமன்றம்
May 21 2019 2:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோட்சே குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த புகாரில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு முன்ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில், கடந்த 12-ம் தேதி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட கமல்ஹாசன், 'சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே' என பேசினார். இதுதொடர்பாக கமல் மீது இந்து முன்னணி சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஜாமீன் அளிக்கக்கோரி கமல்ஹாசன் மனு தாக்கல் செய்துள்ளனர். வழக்கு
இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கமல்ஹாசனுக்கு முன்ஜாமின் வழங்கி நீதிபதி திரு.புகழேந்தி உத்தரவிட்டார். 15 நாட்களுக்குள் அரவக்குறிச்சி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இருநபர் ஜாமின் அளித்து முன்ஜாமின் பெற்றுக்கொள்ளலாம் என நீதிபதி உத்தரவிட்டார்.