திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் கஞ்சா பறிமுதல் : 70 வயது மூதாட்டி உட்பட 3 பேர் கைது
May 20 2019 12:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், 70 வயது மூதாட்டி உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர்.
வேடசந்தூர் பேருந்து நிலையம் அருகே பொதுமக்களும், மாணவ மாணவிகளும் வந்து செல்லும் குங்கும காளியம்மன் கோயில் பகுதியில், கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தகவல் வெளியானது. இது தொடர்பான விசாரணையில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார் ஒன்றரை கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல்செய்தனர். கஞ்சா விற்பனை செய்த 70 வயது மூதாட்டி, ஒரு பெண் உட்பட 3 பேரை கைது செய்து, அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.