நாகை வடக்கு மாவட்டத்தில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 200 பேர் கழகத்தில் இணைந்தனர்
May 21 2019 12:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகை வடக்கு மாவட்டம், குத்தாலம் தெற்கு ஒன்றியம், கோமல் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில், மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 200 பேர் கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
நாகை வடக்கு மாவட்டம், குத்தாலம் தெற்கு ஒன்றியம் சார்பில், கோமல் ஊராட்சியில், மாற்றுக் கட்சியினர் கழகத்தில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்டக் கழகச் செயலாளர் திரு. எஸ்.செந்தமிழன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பா.ம.க, இ.பி.எஸ் அணி, திமுக உள்ளிட்ட மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த பெண்கள் உள்பட 200 பேர், கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், குத்தாலம் வடக்கு ஒன்றியக் கழக செயலாளர் திரு. கஜேந்திரன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் திரு. வாய்மை இளஞ்சேரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.