சட்டவிதிமுறைகளை மீறி விளைநிலங்களில் குழாய் பதிக்கும் கெயில் நிறுவனம் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் - பணிகளை நிறுத்தாவிட்டால் போராட்டம் தீவிரமாகும் என விவசாயிகள் எச்சரிக்கை
May 21 2019 11:38AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கெயில் நிறுவனம், அரசிடம் பெற்ற ஒப்புதல் வழிமுறைகளை பின்பற்றாமல், சட்டத்திற்கு புறம்பாக எரிவாயு குழாய் பதித்து வருவதை தமிழக அரசு தடுத்து நிறுத்தி, அந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் திரு. பி.ஆர் பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
நாகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காவல்துறை மூலம் விவசாயிகள் மீது பொய்வழக்கு போட்டு, சாகுபடி நிலங்களை அபகரித்தது சட்டவிரோமானது என கூறினார்.
சட்டவிதிமுறைகளை மீறி விளைநிலங்களை நாசப்படுத்தி குழாய் பதிக்கும் கெயில் நிறுவனம் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து, பணிகளை தடுத்து நிறுத்தாவிட்டால், போராட்டத்தில் ஈடுபடுவோம் என காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொதுச்செயலாளர் திரு.காவிரி தனபாலன் எச்சரித்துள்ளார். நாகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தல் விதிமுறை முடிந்தவுடன் போராட்டம் தொடரும் என கூறினார்.