திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் இடைத்தேர்தலில் 78 சதவீத வாக்குப்பதிவு - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்
May 20 2019 5:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளிலும் இடைத்தேர்தல் அமைதியாக நடந்து முடிந்ததாகவும், 78 சதவீத வாக்குகள் பதிவானதாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளிலும் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், அரவக்குறிச்சி தொகுதியில் 84 புள்ளி இரண்டு எட்டு சதவீத வாக்குகளும், திருப்பரங்குன்றம் தொகுதியில் 74 புள்ளி ஒன்று ஒன்று சதவீத வாக்குகளும், சூலூர் தொகுதியில் 79 புள்ளி நான்கு ஒன்று சதவீத வாக்குகளும், ஓட்டப்பிடாரம் தொகுதியில் 72 புள்ளி ஆறு ஒன்று சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி திரு- சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். இதேபோல், தருமபுரி உள்ளிட்ட 13 வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற மறுவாக்குப் பதிவில், 84 புள்ளி ஒன்று மூன்று சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
நடைபெற்று முடிந்த 4 சட்ட சபை தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும், ஏற்கனவே நடைபெற்ற 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும், வரும் 23-ந் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.