தமிழகத்தில், கழக ஆட்சி அமைந்ததும், எந்த ஒரு மதத்தின் சுதந்திரமும் பாதிக்காத வகையில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் - தேர்தலுக்காக மட்டுமே கிறிஸ்தவர்களுடன் பயணிக்கவில்லை என்றும் டிடிவி தினகரன் திட்டவட்டம்
May 15 2019 5:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்ததும், எந்த ஒரு மதத்தின் சுதந்திரமும் பாதிக்காத வகையில் அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்தவ போதகர்கள் ஐக்கிய கூட்டமைப்பு சார்பில், அரவக்குறிச்சி தொகுதி அமமுக வேட்பாளர் திரு. சாகுல் ஹமீதுக்கு ஆதரவு தெரிவித்து கரூரில் கூட்டம் நடைபெற்றது.
அப்போது அங்கு கூடியிருந்த கிறிஸ்தவ போதகர்கள் இடையே பேசிய திரு. டிடிவி தினகரன், தேர்தலுக்காக மட்டும் கிறிஸ்தவர்களோடு பயணிக்கவில்லை என்றும், தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் எந்தவித பாகுபாடுமின்றி வாழ வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.