தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டை அமல்படுத்திவரும் எடப்பாடி பழனிசாமி அரசு, மறைந்த மாண்புமிகு அம்மாவின் கொள்கைகளை புறந்தள்ளிவிட்டது : மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு
May 14 2019 1:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டை அமல்படுத்திவரும் எடப்பாடி பழனிசாமி அரசு, மறைந்த மாண்புமிகு அம்மாவின் கொள்கைகளை புறந்தள்ளி தமிழக நலனை அடகு வைத்து ஆட்சி செய்வதாக மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் திரு. ஜவாஹிருல்லா குற்றம் சாட்டியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடுல் இஃப்தார் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தத போது இதனை தெரிவித்த அவர், மக்களின் நம்பிக்கையை தேர்தல் ஆணையம் இழந்துவிட்டதாகவும், பாரதிய ஜனதாவின் பினாமி அரசாக எடப்பாடி அணி திகழ்வதாகவும் குறிப்பிட்டார்.