மதுரை சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது கல்லை எறிந்து கொள்ளையடிக்‍கும் செயல் - நெஞ்சை பதறவைக்கும் வீடியோ காட்சி

Apr 26 2019 4:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரையில் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது கல்லை எறிந்து அவர்களிடம் கொள்ளையடிக்‍கும் நூதனத்தை மர்மநபர்கள் அரங்கேற்றியுள்ளனர். இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், அதுதொடர்பான வீடியோ காட்சி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மதுரை பாண்டியன் நகரை சேர்ந்த பாஸ்கர் என்பவர் நேற்று முன்தினம் இரவு வேலை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது, திருப்பரங்குன்றம் பூங்கா பேருந்து நிறுத்தம் அருகே சாலையில் இருந்த பெரிய கல்லில் மோதி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பேருந்து நிறுத்தம் பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை போலீசார் பார்வையிட்டபோது, அதில் மர்மநபர் ஒருவர் சாலையின் நடுவே கல‌்லை போடுவதும், அதில் மோதி கீழே விழுபவர்களின் சட்‌டை பையிலிருந்து செல்போன், பணத்தை எடுப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அந்த நபர் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த ராஜா என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

பணம் மற்றும் செல்போனை கொள்ளையடிப்பதற்காக உயிரை பறிக்கும் இது போன்ற கொடூர செயல்கள் அனைவரையும் பதைபதைக்க வைக்கிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00