தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் அரவக்குறிச்சி தொகுதி : எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு பொதுமக்கள் கண்டனம்
Apr 25 2019 5:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அரவக்குறிச்சி தொகுதியில் நிலவும், கடும் குடிநீர் பஞ்சத்தைப் போக்க திரானியற்ற ஆளுங்கட்சியினர் இடைத்ததேர்தலுக்காக ஒட்டு கேட்டு வருவதாக தொகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
விவசாயத்தை முதன்மையாக கொண்ட இந்த அரவக்குறிச்சி தொகுதியில், காவிரி, நொய்யல், அமராவதி, குடகனாறு, நல்காஞ்சி ஆகிய ஐந்து ஆறுகள் பாய்கின்றன. காவிரி ஆற்றின் மூலம், சில மாதங்களுக்கு சொற்பமான பகுதி மட்டுமே பயனடைகிறது. நொய்யல் ஆறு, திருப்பூர் சாயக்கழிவால் பாதிப்படைந்து, பாசனத்திற்கும், குடிநீருக்கும் தகுதியற்றதாக மாறிவிட்டது. அமராவதி ஆறு, ஆண்டில் ஒரு சில மாதங்களில் மட்டுமே தண்ணீர் ஓடுவதால் பெரிய அளவில் விவசாயத்திற்கு கைகொடுக்கவில்லை. குடகனாறு மற்றும் நல்காஞ்சி ஆறு இரண்டும் இடைவிடாது மழை பெய்து வெள்ளம் வந்தால் மட்டுமே தண்ணீர் ஓடும். இந்த ஆறுகளால், தொகுதியின் வடக்கு பகுதிக்கு மட்டுமே போதிய தண்ணீர் கிடைத்தாலும், தெற்கு பகுதியில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஆயிரத்து 200 அடி ஆழம் வரை போர் போட்டாலும் தண்ணீர் கிடைக்காத வறண்ட பூமியாக மாறியுள்ளது.
தொழில் வளர்ச்சியில் மட்டுமல்லாது, குடிநீர், மின்விளக்கு, சாலை வசதி என அடிப்படை தேவைகளும் இல்லாத தொகுதியாகவே இருந்து வருகிறது. வறட்சியில் வாடும் இத்தொகுதிக்கு, எடப்பாடி பழனிச்சாமி அரசு எந்த ஒரு நல்ல திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என குற்றம் சாட்டும் தொகுதி மக்கள், குடிநீர் பஞ்சத்தை தீர்க்க நடவடிக்கை எடுக்காத எடப்பாடி தரப்பினர், தற்போது எப்படி ஓட்டு கேட்டு வருகிறார்கள் என்று கேள்வி எழுப்புகின்றனர்.