இலங்கை தொடர்பு குண்டுவெடிப்பு சம்பவம் : உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி

Apr 26 2019 4:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

இலங்கை தொடர்பு குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்‍கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்றது.

இலங்கையில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தூத்துக்குடியில் கிறிஸ்தவர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதிப் பேரணி சென்றனர். தூத்துக்‍குடி கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் அந்தோணி ஸ்டீபன் அதோணி தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது.

திருச்சி கிறிஸ்தவ மறை மாவட்டம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி ஊர்வலம் நடைபெற்றது. திருச்சி பாரதிதாசன் சாலையிலிருந்து தொடங்கி தலைமை தபால்நிலையம் வழியாக மேலப்புதூர் புனித மரியன்னை பேராலயத்தில் ஊர்வலம் முடிவடைந்தது. கிறிஸ்தவ பங்குமக்கள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இஸ்லாமியர்கள் என 700-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்த அமைதி ஊர்வலத்தில், கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியும், கருப்பு பேட்ஜ் அணிந்தும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, மதுரையில் சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ நன்மாறன் உட்பட பலர் பங்கேற்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00